Posts

VELLOREHEADLINE:காட்பாடி வண்டறந்தாங்கல் கிராமத்தில் குடியரசு தின விழா முன்னிட்டு கிராமசபை கூட்டம்

Image
வேலூர் அடுத்த காட்பாடி வண்டறந்தாங்கல் ஊராட்சியில் குடியரசு தின விழா முன்னிட்டு தேசிய கொடி ஏற்று விழா மற்றும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக தலைவர் ராகேஷ் வேலூர் அடுத்த காட்பாடி வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவராக அதிமுகவை சேர்ந்த எஸ்.பி.ராகேஷ் ரெட்டியார் இருந்து வருகின்றார். இந்தியாவின் 77 -வது குடியரசு தினவிழா முன்னிட்டு பஞ்சாயத்து அலுவலகத்தில் காலை தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்து இனிப்பு வழங்கினார்.பின்பு முற்பகல் 11 மணியளவில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கிராம மக்களின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்து ஆவன செய்வதாக கூறினார். குடியரசு தினவிழா மற்றும் கிராமசபை கூட்டத்தில் செயலாளர், துணைத்தலைவர், கிராம வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.....by variyar

VELLOREHEADLINE : கே.வி.குப்பம் கீழ் முட்டுக்கூர் ஸ்ரீஅருணாச்சல ஆரம்பபள்ளியில் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் விழா

Image
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கீழ்முட்டுக்கூரில் உள்ள ஸ்ரீஅருணாச்சலா வித்யாலயா நர்சரி மற்றும் ஆரம்ப பள்ளியில் இந்து இளைஞர் முன்னணி சார்பில் சுவாமி விவேகானந்தரின் 163 -வது பிறந்தநாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டது. மாணவ-மாணவியர்களுக்கு இனிப்பு, பென்சில், ஸ்கேப், சார்பனர், ரைசர் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டீக்காராமன், மாவட்ட செயலாளர் லோகேஷ்வரன், தலைமை ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ-மாணவியர் பங்கேற்றனர்.

VELLOREHEADLINE: வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் அன்பு பிறந்தநாள்

Image
காட்பாடி செங்குட்டை ஆர்.கே.ஏ.பில்டர்ஸ் உரிமையாளர் அன்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்து வேலூர் அடுத்த காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் / செங்குட்டை ஆர்.கே.ஏ.பில்டர்ஸ் உரிமையாளர்/வேலூர் மாநகராட்சி 1-வது வார்டு திமுக கவுன்சிலர் அன்புவின் பிறந்தநாள் முன்னிட்டு நண்பர்கள், ஊழியர்கள் மாலை அணிவித்து வாழ்த்து கூறினர். அருகில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சச்சிதானந்தம் (ஓய்வு) உள்ளார்.

VELLOREHEADLINE

Image
காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில்  ஸ்ரீஅனுமனுக்கு தங்க கவச அலங்காரம் வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கில மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை தங்க கவசம் அணிவிக்கப்படும், அதன் படி டிசம்பர் மாதம் 7-ம் ஞாயிற்றுக்கிழமை காலை ஆஞ்சநேயருக்கு காலையில் திருமஞ்சனம் செய்யப்பட்டு தங்க கவசம், 108 வடைமாலை சாத்தப்பட்டு பின் தீபாராதனை நடந்தது. காலை மற்றும் மாலை தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. அலங்காரத்தை கோயில் அர்ச்சகர், கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார்.

VELLOREHEADLINE

Image
VELLOREHEADLNE(online): 18.11.2025 வேலூர் அடுத்த கழிஞ்சூர், தாராபடவேடு ஏரிகள் ரூ.36 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா தலத்தை பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆட்சியர், எம்.பி.பங்கேற்பு வேலூர் அடுத்த காட்பாடி கழிஞ்சூர், தாராபடவேடு ஏரிகளை இணைத்து 6,2 கி.மீ. நடைபாதை, படகு குழாம். செயற்கை மண் திட்டுக்கள் அமைத்து ரூ.36-59 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா தலமாக்கி அதனை பொதுமக்களுக்கு நேற்று  இரவு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி, வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், எம்எல்ஏ அமலு, சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் (பொதுப்பணி) திலகம், மேயர் சுஜாதா துணை மேயர் சுனில்குமார், பகுதி செயலாளர் வன்னியராஜா, மண்டல தலைவர் புஷ்பலதா, மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் அன்பு, டீட்டா சரவணன்,துறை சார்ந்த அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பகுதிபொதுமக்கள் என பலர் பங்குகொண்டனர். மேலும் அமைச்சர் ரூ.20.9 கோடி மதிப்பீட்டில் காட்பாடியில் 3 வெள்ள தடுப்பு பணிகள், கழிஞ்சூர் ஏரியின் உபரிநீர் கால்வாய் ரூ.50 லட்சம் மதிப்பில் அமை...

VELLOREHEADLINE

Image
VELLOREHEADLINE (online):05.11.2025 வேலூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கதிர் ஆனந்திற்கு காட்பாடியில் வரவேற்பு வேலூர் வடக்கு திமுக மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்ட வேலூர் எம்.பி.கதிர் ஆனந்தை , அவரது காட்பாடி காந்திநகர் இல்லத்தில் திமுக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். by variyar

VELLOREHEADLINE

Image
VELLOREHEADLINE (online):05.11.2025 வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலிலில் அன்னாபிஷேகம் வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரருக்கு அன்னாபிஷேகத்தை முன்னிட்டு அரிசி சாதம் மற்றும் காய் - கனிகளால் அலங்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் by variyar