Posts

VELLOREHEADLINE

Image
VELLOREHEADLNE(online): 18.11.2025 வேலூர் அடுத்த கழிஞ்சூர், தாராபடவேடு ஏரிகள் ரூ.36 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா தலத்தை பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆட்சியர், எம்.பி.பங்கேற்பு வேலூர் அடுத்த காட்பாடி கழிஞ்சூர், தாராபடவேடு ஏரிகளை இணைத்து 6,2 கி.மீ. நடைபாதை, படகு குழாம். செயற்கை மண் திட்டுக்கள் அமைத்து ரூ.36-59 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா தலமாக்கி அதனை பொதுமக்களுக்கு நேற்று  இரவு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி, வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், எம்எல்ஏ அமலு, சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் (பொதுப்பணி) திலகம், மேயர் சுஜாதா துணை மேயர் சுனில்குமார், பகுதி செயலாளர் வன்னியராஜா, மண்டல தலைவர் புஷ்பலதா, மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் அன்பு, டீட்டா சரவணன்,துறை சார்ந்த அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பகுதிபொதுமக்கள் என பலர் பங்குகொண்டனர். மேலும் அமைச்சர் ரூ.20.9 கோடி மதிப்பீட்டில் காட்பாடியில் 3 வெள்ள தடுப்பு பணிகள், கழிஞ்சூர் ஏரியின் உபரிநீர் கால்வாய் ரூ.50 லட்சம் மதிப்பில் அமை...

VELLOREHEADLINE

Image
VELLOREHEADLINE (online):05.11.2025 வேலூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கதிர் ஆனந்திற்கு காட்பாடியில் வரவேற்பு வேலூர் வடக்கு திமுக மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்ட வேலூர் எம்.பி.கதிர் ஆனந்தை , அவரது காட்பாடி காந்திநகர் இல்லத்தில் திமுக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். by variyar

VELLOREHEADLINE

Image
VELLOREHEADLINE (online):05.11.2025 வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலிலில் அன்னாபிஷேகம் வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரருக்கு அன்னாபிஷேகத்தை முன்னிட்டு அரிசி சாதம் மற்றும் காய் - கனிகளால் அலங்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் by variyar

VELLOREHEADLINE

Image
VELLOREHEADLINE (online):29.10.25, வேலூர் கோட்டை மைதானத்தில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு வேலூர் கோட்டை மைதானத்தில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க நவம்பர் முதல் வாரத்தில் துணை முதல்வர் உதயநிதி நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ள நிலையில் அமைச்சர் துரைமுருகன் வியாழக்கிழமை இடத்தை ஆய்வு செய்தார். உடன் கலெக்டர் சுப்புலெட்சுமி, எம்.பி.கதிர் ஆனந்த், எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா உள்ளிட்ட பலர் உள்ளனர்.

VELLOREHEADLINE

Image
VELLOREHEADLINE (online):29.10.25 ஜோலார்பேட்டையில் 10 ஆண்டுகளுக்குபின் சந்தித்து வாழ்த்து பரிமாறிய பத்திரிக்கை நண்பர்கள் தென்னிலை கதிர் புலனாய்வு மாதமிருமுறை இதழ் ஆசிரியரும், ஊடக உரிமைக்குரல் பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்புசங்க நிறுவன தலைவரும் ஊடக மக்கள் முன்னேற்றக் கழக கட்சி தலைவருமான வி.எம். தமிழன் வடிவேல், 10 ஆண்டுகளுக்கு பின் புதன்கிழமை திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நேரில் சந்தித்து என்னிடம் வாழ்த்து (VELLOREHEADLINE EDITOR K.M.VARIYAR) கூறினார்

VELLOREHEADLNE

Image
VELLOREHEADLINE (online):29.10.2025 ஜோலார்பேட்டையில்  பத்திரிக்கையாளர்களின் கலந்தாய்வு கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பத்திரிக்கையாளர்களின் கலந்தாய்வு கூட்டம் புதன்கிழமை பகல் தென்னிலை கதிர் புலனாய்வு இதழ் (மாதமிருமுறை) ஆசிரியர் சென்னை வி.எம். தமிழன்வடிவேல் தலைமையில் நடந்தது. வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட மூத்த பத்திரிக்கையாளர் வேலூர் வாரியார், உதவி ஆசிரியர் வேலூர்ராஜ்பாபு, வாணியம்பாடி செய்தியாளர் ஆனந்த், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் ஏலகிரி செய்தியாளர்கள் பங்கேற்றனர்.

VELLORE

Image