Skip to main content
காட்பாடி அடுத்த பள்ளிகுப்பம் ரேசன்கடையை ஆய்வு செய்த வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன்.வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் காட்பாடி அடுத்த பள்ளிகுப்பத்தில் இயங்கிவரும் நியாயவிலைக்கடை (ரேசன்) யை ஆய்வு மேற்கொண்டார்.எடை இயந்திரம், முதலுதவி பெட்டி, கடை சுத்தம், அரிசி தரம், பருப்பு, பாமாயில் இருப்பு, ஆகியவற்றை ஆய்வு செய்தார்.பின்பு பொதுமக்களிடம் கடை திறக்கப்படுகிறதா? பொருள்கள் சரியாக போடுகிறார்களா? என்பதையும் விசாரித்தார்.ஆய்வின்போது மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, தாசில்தார் ஜெகதீஸ்வரன், வட்ட வழங்கல் அலுவலர் சௌந்தர், வழங்கல் அலுவலக வட்ட பொறியாளர் சிவா, மாநகராட்சி திமுக கவுன்சிலர் விமலா, நியாயவிலைக்கடை விற்பனையாளர் குமரேசன் உள்ளிட்ட பலர் இருந்தனர். COLLETORE Ins 22.12.2022 16:36 Variyar
Comments
Post a Comment