Posts

VELLOREHEADLINE: ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீஇராமானுஜரின் 1009- வது அவதார தினம்

Image
ஸ்ரீபெரும்புதூரில் வைணவ குருவானஸ்ரீராமானு ஜரின் 1012-வது மஹோற்சவம் முன்னிட்டு திருத்தேர் புஷ்ப பல்லக்கில் வீதியுலா சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவபெருமாள் குடிகொண்டு இருக்கும் தளத்தில் வைணவ குருவாக அவதரித்தவர் ஸ்ரீராமானுஜர், இவர் வைணவ தொண்டு ஆற்றி அனைவரையும் வழிநடத்தியவர். இவரின் 1012-வது மஹோற்சவம் (1009பிறந்தநாள்) மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆதிகேசவபெருமாள் ஆசியுடன், இராமானுஜர் திருத்தேர் புஷ்ப பல்லக்கில் செவ்வாய்கிழமை வீதியுலா வந்து அருள்பாலித்தார். புதன்கிழமை கந்தப்பொடி உற்சவமும் நடந்தது. அதேப்போல் அன்னதானம் ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிவர் சன்னதியில் நடந்தது. இதில் ஏரளமான பக்தர்கள் பங்கேற்றன. மேலும் அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா இளைஞர் மற்றும் இளம்பெண்கள் கூட்டமைப்பு (AIVF)சார்பில் அதன் தேசிய பொதுச்செயலாளர் சின்னைய்யா ஜெகதீசன் ஆச்சாரி குடும்பத்தினர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

VELLOREHEADLINE: ஆந்திர முதல்வர் நாயுடுவின் 76 -வது பிறந்தநாள் விழா

Image
ஆந்திரபிரதேச மாநில முதல்வர் நாராசந்திரபாபு நாட்டுவின் 75 -வது பிறந்தநாள் முன்னிட்டு முகாம் அலுவலகத்தில் திருப்பதி - திருமலை தேவஸ்தான கமிட்டி துர்க்ககுடி அர்ச்சகர்கள் முதல்வர் மற்றும் துணைவியாருக்கு பெருமாள் தாயாருடன் கூடிய படத்தை வழங்கி ஆசி வழங்கினார்கள். இதில் கூடுதல் செயல் அலுவலர் வெங்கய்யா சௌத்ரி, துர்கா குடி செயல் அலுவலர் ஷீனாநாயக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். K.M.VARIYAR

VELLOREHEADLINE: நாகர்கோயிலில் ROAD SHOW - நடத்திய பிரதமர் மோடி

Image
நாகர்கோயிலில் பிரதமர் மோடி ரோட் ஷோ கன்னியாக்குமரி மாவட்டம் நாகர்கோயிலில் பிஜேபி வேட்பாளர்களை ஆதரித்து பாரதப் பிரதமர் மோடி ரோட் ஷோ நடத்தினார். இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பிஜேபி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணா மனி ஆகியோர், மோடி வாகனத்தில் உடன் சென்றனர். கே.எம். வாரியார்

VELLOREHEADLINE: வேலூரில் நாளை தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்

Image
தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் வேலூரில் நாளை 12-ம் தேதி நடக்கிறது. வேலூர் அடுத்த வள்ளலாரில் உள்ள தலைமை அலுவலகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் வரும், 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. அதில் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும் படி சங்க மாநில கவுர தலைவர் சி.ராஜவேலு கேட்டுக்கொண்டு உள்ளார். கே.எம். வாரியார்

NAAN MEDIA

Image

VELLOREHEADLINE: இரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் மெய்ஞான விழா

Image
வேலூர் அடுத்த இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயிலில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமியின் 59 -வது மெய்ஞானத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வேலூர் மாவட்ட எல்லையில் இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் திருக்கோயில் உள்ளது.இதை புணரமைத்து கோயிலை கட்டி காத்து வருபவர் பாலமுருகன் அடிமை சுவாமிகள். இவர் இந்த கோயிலின் பரம்பரை அறங்காவலர். அவரின் 59 -வது மெய்ஞான விழி கொண்டாடப்பட்டது. காலையில் வள்ளிதெய்வானை முருகபெருமானுக்கு அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம் பின்பு விக்ஷே பூஜையை பாலமுருகன் அடிமை செய்தார். பின்பு பக்தர்களுக்கு அன்னதானத்தை துவக்கிவைத்தார். பல்வேறு ஆன்மீக தலைவர்கள் பங்கேற்றார். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தபின்பு அன்னதான நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை, இந்து அறநிலைத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் செய்து இருந்தனர். K.M.VARIYAR

காட்பாடியில் காங்கிரஸ் கமிட்டி கிளை அலுவலகம் திறப்பு விழா

Image
வேலூர் மாநகர மாவட்ட 1,2-வது மண்டல காங்கிரஸ் கட்சி கமிட்டி கிளை அலுவலகத்தை திறந்துவைத்த மாவட்ட தலைவர் வாகித் பாஷா   வேலூர் மாநகர மாவட்ட ஒன்றாவது மற்றும் இரண்டாவது காங்கிரஸ் கமிட்டி கிளை அலுவலம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை இரவு நடந்தது.1-வது மண்டல தலைவர் பாலகுமரன், 2-வது மண்டல தலைவர் ஜான் பீட்டர் தலைமை தாங்கினர். வேலூர் மாநகர மாவட்ட தலைவர் எம். வாகித் பாஷா, காங்கிரஸ் கட்சி அலுவலத்தை திறந்துவைத்தார். சிறப்பு அழைப்பாளராக பி.டீக்காராமன், சிறப்பு விருந்தினராக மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரசன்னகுமார். மூத்த காங்கிரஸ் உறுப்பினர் குருஜி, மற்றும்திருமால், காட்பாடி ஜெயகர், பிலால், ரகு, துளசிராமன்,'பிரேம், கணேஷ், லோகநாதன், பிரேம்குமார், முனியப்பன், ஜிலான், ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். காட்பாடி சட்டமன்ற சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் பி.சதீஷ்குமார் நன்றி கூறினார்.