கார்ணாம்பட்டு அரசுமேல்நிலைப்பள்ளி மாணவிகள் 2 பேர் தேசிய ஹாக்கி போட்டியில் விளையாட தேர்வு
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கார்ணாம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஹாக்கி போட்டியில் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இப்பள்ளியில் படிக்கும் சேவூர் லட்சுமிபுரத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு பயிலும் மாணவி சுபாஷினி, கார்ணாம்பட்டை சேர்ந்த தமிழ்செல்வி ஆகிய 2 பேரும், தேசிய அளவிலான இந்தியா சார்பாக ஓடிஸா மாநிலம் ரூர்கேலாவில் சர்வதேச ஹாக்கி போட்டியில் விளையாட தகுதிபெற்று உள்ளார்கள்,
இந்த 2 பேருக்கும் வாழ்த்துக்களை வேலூர் மாவட்ட இந்து முன்னணி மற்றும் இந்து ஆட்டோ தொழிலாளர் சங்க ம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.
Comments
Post a Comment