காட்பாடியில் காங்கிரஸ் சார்பில் சத்தியாகிரக அறப்போராட்டம்

வேலூர் அடுத்த காட்பாடியில் பிஜேபி அரசை கண்டித்து சத்தியாகிரக அறப்போராட்டம்


வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி.பதவியை நீதிமன்றம் பறித்தது.
இதனை கண்டித்து காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் 5-ம் தேதி காலை சத்தியாகிரக அறப்போராட்டம் நடந்தது.
காட்பாடி ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.
வடக்கு ஒன்றியதலைவர் கணேஷ்வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் (ஓபிசி), 1 -வது மண்டல தலைவர் பாலகுமார், 2-வது மண்டலத் தலைவர் ஜான் பீட்டர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டீக்காராமன்.மாநில பொதுச்செயலாளர் (எஸ்.சி.) சித்தரஞ்சன், மூத்த நிர்வாகிகள் ஆண்ட்ரூஸ், ரேமாண்ட், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், வாகீத் பாசா, கதிர்வேலு, கப்பல் மணி, மாவட்ட செயலாளர் (ஓபிசி) கிருஷ்ணன்
 உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.டிசிடியு மற்றும் ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் பிரேம்குமார் நன்றி கூறினார்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்