அதிமுக சார்பில் காட்பாடி, வேலூரில் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் விழா

வேலூர், காட்பாடி பகுதியில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா!


வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 69-வது பிறந்தநாள் முன்னிட்டு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.
காட்பாடி அடுத்த காங்கேயநெல்லூரியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணி சுவாமி கோயிலில் முருகனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இதில் வேலூர் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர் கே அப்பு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார். இதில் மாவட்ட துணைசெயலாளர் ஜெயபிரகாஷ், காட்பாடி பகுதி செயலாளர்கள் நாராயணன், ஜனார்த்தனன். வண்டறந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ், வட்ட செயலாளர் திருநாவுக்கரசு, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாட்டை வேலூர் மாநகராட்சி அதிமுக மாமன்ற உறுப்பினரும் வட்ட செயலாளருமான கே.பி.ரமேஷ் செய்து இருந்தார்.
விருதம்பட்டில் நடந்த விழாவில் அன்னதானம் மற்றும் புடவைகளை மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்பு வழங்கினார். இதில் மாணவரணி மாநில துணை செயலாளர் எம்.டி.பாபு, நீல. விஷ்ணுகுமார், 15-வது வட்ட செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வேலூர் அடுத்த சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ.சாலையில் நடந்த எடப்பாடி பழனிச்சாமி பிறந்த விழாவில் மாவட்ட செயலாளர் அப்பு அன்னதானம் வழங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் மூர்த்தி, ஜெய், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாட்டை அதிமுகவின் 26-வது வட்ட செயலாளர் முரளி செய்து இருந்தார்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்