காட்பாடியில் கல்வான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு 3 - ம் ஆண்டு நினைவு அஞ்சலி

காட்பாடியில் கல்வான் பள்ளதாக்கில் வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு 3-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் வேலூர் மாவட்ட அனைத்து முன்னாள் இராணுவத்தினர் சார்பில் 15-ம் தேதி வியாழக்கிழமை காலையில் 15.06.21-ம் ஆண்டு நடந்த கல்வான் பள்ளதாக்கில் ஒரு இராணுவ அதிகாரி உள்ளிட்ட 20 இராணுவவீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
அதன் 3-ம் ஆண்டு நினைவுநாள் முன்னிட்டு புகைபடத்திற்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
சங்கத்தின் வேலூர் மாவட்ட தலைவர் கே.சிவக்குமார் தலைமையில் சிறப்பு விருந்தினராக 10-வது என். சி.சி.உதவி இயக்குநர் வெல்வர் சோல்சர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜம்புலிங்கம், செயலாளர் ஜெகதீசன், ஆலோசகர் பாஸ்கரன், துணை ஒருங்கிணைப்பாளர் வடிவேலன், துணை செயலாளர் ராஜேந்திரன், இணை செயலாளர் தசரதன், ஒருங்கிணைந்த பட்டாளத்தின் தலைவர் ஜெயக்குமார், என்.சி.சி.மாணவர்கள்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்