காட்பாடிபிரம்மபுரத்தில் ரூ 11 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையத்தை திறந்த அமைச்சர் துரைமுருகன்
காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் புதிய அங்கன்வாடி மையத்தை திறந்துவைத்த அமைச்சர் துரைமுருகன்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராம பஞ்சாயத்தில் ரூ 11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஆர்த்தி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார், பிரம்மபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment