வேலூர் மாவட்டத்தில் ஜாக்டோ - ஜியோ சார்பில் மனிதசங்கிலி
பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்த கோருதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி வேலூர் மாவட்ட ஜாக்டோ - ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு ஜாக்டோ ஜியோவின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும் தொழிற்கல்வி ஆசிரியர கழகத்தின் தலைவருமான செ.நா.ஜனார்த்தனன், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன் வேளாண்மை ஆசிரியர் சங்க மாநில பொருளாளர் அக்ரி. ராமன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஜாக்டோ ஜியோ பேரமைப்பில் இணைந்துள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்ட பொருளாளர் ஆர்.கற்பகமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெ.வில்வநாதன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் பெ.இளங்கோ, க. குணசேகரன், எஸ். ரகுபதி, தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.அஜீஸ்குமார், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட இரா.சிவராமன், டி.இரவிகுமார், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி என்.தனசேகரன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாவட்ட பொருளாளர் ச.சச்சிதானந்தம், தமிழக தமிழாசிரியர் கழக வாரா மாவட்ட நிர்வாகி த.ஜெயக்குமார், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்க எஸ். ஆனந்த், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வேலூர் காந்திசிலை, அருகில் நடைபெற்ற பேராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ட்டி.டி.ஜோஷி, மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலத்தலைவர் அ.சேகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
அணைகட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ.சீனிவாசன்
பேர்ணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்கேயுசத்யகுமார்,
கே.வி.குப்பம், வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.சீனிவாசன் தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் உரிமை பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் துரை கருணாநிதி ஆகியோர் தலைமை தாங்கினர்
குடியாத்தம், வட்டாட்சியர் அலுவலகம் அருகில் எம்.ஜெயகாந்தன் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் தமிழ்நாடு உருது வழி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் முகமது ஷாநவாஸ் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாநில செயலாளர் ஜி.கோபி ஆகியோர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
அனைத்து மையங்களிலும் சுமார் 1800 ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.
கோரிக்கைகள்
1. பங்கேற்பு புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
2. அகவிலைப்படி 4%சதவீதம் கடந்த 1.7.2022முதல் வழங்கிட வேண்டும். 3.சரண்விடுப்பு தடை ஆணையை ரத்து செய்து சரண்விடுப்பு சம்பளம் பெற தமிழக அரசு உத்தரவு வழங்க வேண்டும். .
3. வெளிமுகமை (Outsourcing) முறையில் அத்து கூலிகளாக தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் தற்காலிகமாக அரசாணை எண்.115;139;152ன்படி நியமனம் செய்வதை ரத்து செய்து தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 6லட்சம் பணி இடங்களை உடனடி யாக நிரப்பிட வேண்டும்.
4.தொகுப்பு ஊதியம், சிறப்புஊதியம், மதிப்பூதியம் போன்றவற்றில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர்க்கு கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும்
5. இடைநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்.
6. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் அரசு துறையில் பணி புரியும் ஊழியர்களை அத்துக்கூலிகளாக மாற்றும் அரசாணை 115, 139, 152 ரத்து செய்ய வேண்டும்.
7. அதே போல் இளைஞர்களின் வேலை வாய்ப்பை கேள்விக் குறியாக்கும் அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும்
(செ.நா.ஜனார்த்தனன் மாநிலத்தலைவர்
தொழிற்கல்வி ஆசிரியர் கழக
மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்
9443345667)
Comments
Post a Comment