அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்விந்தர்சிங் காத்திருப்போர் பட்டிலுக்கு மாற்றம்

திருநெல்வேலியில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவர்களுக்கு தண்டனையாக பற்களை பிடுங்கி கொடுமைப்படுத்திய கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, பாப்பாக்குடி போன்ற காவல்நிலையத்திற்கு உட்பட்ட சுமார் 10 மேற்பட்ட குற்றவாளி இளைஞர்களை பிடித்து கருங்கற்களால் அவர்களின் பற்களை உடைத்தும், பிடுங்கியுள்ளார் காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங். 

இதையடுத்து அவர் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் உதவி ஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது. பின்னர் இச்சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்பீர் சிங், காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

இதையடுத்து கைதிகளின் பல்லை உடைத்தும், வாயைக் கிழித்தும் கொடுமை செய்த காவல் உதவி கண்காணிப்பாளரை கைது செய்ய வேண்டும் என்று சிறைவாசிகள் நல உரிமை மைய்யம் கேட்டுக்கொள்கின்றது

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்