காட்பாடியில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சர் துரைமுருகன் !!!
வேலூர் அடுத்த காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் 8 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 343 மாணவர்கள், 609 மாணவிகள் என மொத்தம் 952 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை நீர் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
வேலூர் முதன்மைக் கல்வி அலுவலர் மணிமொழி வரவேற்றார். வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், அமுலு, வேலூர் மேயர் சுஜாதா, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மு.பாபு, 1-வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா, தலைமை ஆசிரியர் ஜோதிஸ்வரன், வேலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் அன்பு, டீட்டா சரவணன், தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மாவட்ட கல்வி அலுவலர் அங்கு லட்சுமி நன்றி கூறினார்.
Comments
Post a Comment