வேலூரில் விடுதலையான சிறைவாசிகளுக்கு சங்கம் சார்பில் உதவி !!!

வேலூர் மத்திய சிறையில் இருந்து இரண்டு சிறைவாசிகள் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தண்டனை குறைப்பு பெற்று விடுதலை செய்யப்பட்டனர்  தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டன
வேலூர் மத்திய சிறையில் இருந்து பொன்னுசாமி என்கிற சித்திக் வயது 77 தகப்பனார் பெயர் செல்வராஜ், 
ஜாகிர் உசேன் வயது 50 தகப்பனார் பெயர் மக் பூத்  இவர்கள் இருவரும் தண்டனை குறைப்பு பெற்று இன்று 15.08.2023  விடுவிப்பதற்கான சான்றுகளை வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் வழங்கினார்.
மேலும் அவர்கள் சிறையில் செய்த வேலைகளுக்காக உழைப்பூதியத்துக்கான தொகையினையும் வழங்கினார் 
இந்த நிகழ்வின் போது தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் வேலூர் மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் டி.எம்.விஜயராகவலு தலைமையில், செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் பொருளாளர் முனைவர் ஆர் சீனிவாசன் ஆகியோர் அரிசி பருப்பு, உப்பு புளி மிளகாய், உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார்கள். 
இந்த நிகழ்வின் போது உதவி சிறை அலுவலர் அருள்குமரன் சிறை கண்காணிப்பு உதவி ஆய்வாளர் டி.மீனாட்சிசுந்தரம் தலைமை காவலர் கே.சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்