VELLOREHEADLINES : வேலூர் மாநகராட்சி 1-வது வார்டு திமுக கவுன்சிலர் அன்புக்கு பிறந்தநாள் !!
வேலூர் அடுத்த காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் சங்க தலைவரும், வேலூர் மாநகராட்சி 1-வது வார்டு திமுக கவுன்சிலருமான அன்புவின் பிறந்தநாள் முன்னிட்டு பள்ளி வளாகத்தில் தென்னங்கன்றுகளை அவர் நட்டார். உடன் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிஸ்வரன் பிள்ளை மற்றும் ஆசிரியர்கள் இருந்தனர்.
பின்பு அன்புவின் அலுவலகம் எதிரில் 500 பேருக்கு அன்னதானம் செய்யப்பட்டது. பிறகு ஜே.ஜே.நகர் இளைஞர்கள் யாசின், மன்சூர்.பாபு, மெளனகுரு மற்றும் இளைஞர்கள் மலர் கீரிடம், மாலை அணிவித்து கேக் வெட்டி கொண்டாடினர்.
Comments
Post a Comment